கருவில் பிறந்த ஆசையாய் இருக்கலாம் ,
அன்னை முகத்தில் படித்தது
மார் புதைக்கையில் மறைந்து போனது
தேமா புளிமா என சீர் பிரிக்கையில்
வெறும் தளைதான் எஞ்சியது
கனவினில் வந்தது
விடிகையில் கலைந்தது,
பயணத்தில் வந்தவை
முடிகையில் சென்றது,
உளியின் கூர்மையுடன்
எழுத்தெடுத்து
சுயம்புவாய் மண்முட்டி வெளிவருகையில்
"கவிதை யெழுத முயன்றவன்" என
கல்லறையில் எழுத வேண்டியதயிற்று
அவன் கவிதையை.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment